இந்தியா

இந்தியாவில் புயலை கிளப்பிய தகவல் - உண்மையான வாக்காளர்கள் எண்ணிக்கை மாற்றப்பட்டதா?

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த தவறான கருத்துகளை களையும் விதமாக, இந்திய தேர்தல் ஆணையம் காங்கிரஸுக்கு கடிதம் எழுதியுள்ளது.

தன்னிச்சையாக வாக்காளர்களை நீக்குதல் மற்றும் சேர்த்தல் நடைபெற்றதாகவும், அத்துடன் வாக்குப்பதிவு சதவிகிதத்தில் மாற்றங்கள் நடைபெற்றதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது.

மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குப்பதிவு சதவிகிதத்திற்கும், இரவு 11 மணிக்கு வெளியிட்ட இறுதி வாக்குப்பதிவு சதவிகிதத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் மற்றும் அதிகரிப்பு இருந்ததாக குற்றம் சாட்டியிருந்தது.

இறுதி வாக்குப்பதிவு சதவிகிதத்தில் எந்த முரண்பாடும் இல்லை என்றும் வாக்குப்பதிவு குறித்த விவரங்களின் சட்டப்பூர்வ படிவம் 17C என்பதால், உண்மையான வாக்காளர் எண்ணிக்கையை மாற்றுவது சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

வாக்காளர் பட்டியலில், முதல் இறுதி எண்ணிக்கை வரை குறைந்தது 60 முறை அரசியல் கட்சிகள் எப்படி சேர்க்கப்பட்டன என்பதை தேர்தல் ஆணையம் நினைவூட்டியுள்ளது.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?