இந்தியா

இந்தியாவில் புயலை கிளப்பிய தகவல் - உண்மையான வாக்காளர்கள் எண்ணிக்கை மாற்றப்பட்டதா?

தந்தி டிவி

மகாராஷ்டிராவில் நவம்பர் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் குறித்த தவறான கருத்துகளை களையும் விதமாக, இந்திய தேர்தல் ஆணையம் காங்கிரஸுக்கு கடிதம் எழுதியுள்ளது.

தன்னிச்சையாக வாக்காளர்களை நீக்குதல் மற்றும் சேர்த்தல் நடைபெற்றதாகவும், அத்துடன் வாக்குப்பதிவு சதவிகிதத்தில் மாற்றங்கள் நடைபெற்றதாகவும் காங்கிரஸ் குற்றம் சாட்டியிருந்தது.

மாலை 5 மணிக்கு தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குப்பதிவு சதவிகிதத்திற்கும், இரவு 11 மணிக்கு வெளியிட்ட இறுதி வாக்குப்பதிவு சதவிகிதத்திற்கும் மிகப்பெரிய வித்தியாசம் மற்றும் அதிகரிப்பு இருந்ததாக குற்றம் சாட்டியிருந்தது.

இறுதி வாக்குப்பதிவு சதவிகிதத்தில் எந்த முரண்பாடும் இல்லை என்றும் வாக்குப்பதிவு குறித்த விவரங்களின் சட்டப்பூர்வ படிவம் 17C என்பதால், உண்மையான வாக்காளர் எண்ணிக்கையை மாற்றுவது சாத்தியமில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

வாக்காளர் பட்டியலில், முதல் இறுதி எண்ணிக்கை வரை குறைந்தது 60 முறை அரசியல் கட்சிகள் எப்படி சேர்க்கப்பட்டன என்பதை தேர்தல் ஆணையம் நினைவூட்டியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்