இந்தியா

திருமணம் செய்ய வலியுறுத்தி பெண்ணை வீட்டுக்குள் சிறைப்பிடித்து வைத்த இளைஞர்

மத்திய பிரதேசத்தில் ஒரு தலை காதலால், இளைஞரால் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்ணை 4 மணி நேரத்துக்கு பிறகு போலீசார் மீட்டனர்.

தந்தி டிவி
போபாலை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது வீட்டுக்குள் பெண் ஒருவரை சிறைப்பிடித்து வைத்திருந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து, நேற்று பிற்பகலில் போலீசார் அங்கு சென்றபோது, வீட்டுக்குள் இருந்த இளைஞர், அந்த பெண்ணை தான் காதலிப்பதாகவும் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அந்த பெண்ணை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். ஒரு முத்திரைத் தாளை கொண்டு வந்து எழுத்துப்பூர்வமாக எழுதி தர வேண்டும் எனவும் அந்த இளைஞர் கூறினார். சுமார் 4 மணி நேரம் நீடித்த இழுப்பறிக்கு பிறகு, போலீசார் அதிரடியாக நுழைந்து அந்த பெண்ணை மீட்டனர். ரத்த காயங்களுடன் கிடந்த அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்