இந்தியா

திருமணம் செய்ய வலியுறுத்தி பெண்ணை வீட்டுக்குள் சிறைப்பிடித்து வைத்த இளைஞர்

மத்திய பிரதேசத்தில் ஒரு தலை காதலால், இளைஞரால் சிறைப்பிடிக்கப்பட்ட பெண்ணை 4 மணி நேரத்துக்கு பிறகு போலீசார் மீட்டனர்.

தந்தி டிவி
போபாலை சேர்ந்த இளைஞர் ஒருவர், தனது வீட்டுக்குள் பெண் ஒருவரை சிறைப்பிடித்து வைத்திருந்த தகவல் போலீசாருக்கு கிடைத்தது. இதையடுத்து, நேற்று பிற்பகலில் போலீசார் அங்கு சென்றபோது, வீட்டுக்குள் இருந்த இளைஞர், அந்த பெண்ணை தான் காதலிப்பதாகவும் திருமணம் செய்ய விரும்புவதாகவும் கூறியுள்ளார். அவரிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அந்த பெண்ணை கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார். ஒரு முத்திரைத் தாளை கொண்டு வந்து எழுத்துப்பூர்வமாக எழுதி தர வேண்டும் எனவும் அந்த இளைஞர் கூறினார். சுமார் 4 மணி நேரம் நீடித்த இழுப்பறிக்கு பிறகு, போலீசார் அதிரடியாக நுழைந்து அந்த பெண்ணை மீட்டனர். ரத்த காயங்களுடன் கிடந்த அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளைஞரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக