இந்தியா

மக்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு... பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தொடர் அமளி

மக்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு... பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தொடர் அமளி

தந்தி டிவி

மக்களவை நாளை காலை வரை ஒத்திவைப்பு... பெகாசஸ் விவகாரம் தொடர்பாக தொடர் அமளி

எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மக்களவை நாளை காலை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. பெகசாஸ் விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இந்நிலையில், இது குறித்து விவாதிக்க தயாராக உள்ளதாக அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பெகாசஸ் சேவையை இந்தியாவில் பயன்படுத்தி வருவதாக வெளியான தகவல் தவறானது எனவும், நாடாளுமன்றம் கூடுவதற்கு ஒரு நாள் முன்னதாக இது போன்ற செய்திகள் வெளியாவது, இந்திய ஜனநாயகத்தை களங்கப்படுத்த நடக்கும் முயற்சி எனக் குறிப்பிட்டார்.தொடர்ந்து அமளி நீடித்ததால், நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் முதலில் அடுத்தடுத்தும், பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு