சாலை பணிகளின் போது நிலச்சரிவு -அலறியடித்து ஓடிய வாகன ஓட்டிகள்
காஷ்மீரில் சாலை விரிவாக்கப் பணியின் போது நிலச்சரிவு ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது.
ஸ்ரீநகர்-பாரமுல்லா தேசிய நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக மண்ணைத் தளர்த்தும் பணிகள் நடைபெற்றது. அப்போது எதிர்பாராத விதமாக மலையில் இருந்து பாறைகள் பெரிய புகை மூட்டத்துடன் சரிந்தன. சம்பவத்தன்று வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதனைக் கண்டு வாகன ஓட்டிகள் அலறியடித்து ஓடிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.