லடாக் யூனியன் பிரதேசத்தில் நுப்ரா, ஷாம், சாங்தாங், ஜான்ஸ்கர் மற்றும் டிராஸ் ஆகிய 5 புதிய மாவட்டங்களை உருவாக்க துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா ஒப்புதல் அளித்துள்ளார். இது லடாக் மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை என்று அவர் தெரிவித்துள்ளார். இதன் மூலம் லடாக்கின் மொத்த மாவட்டங்களின் எண்ணிக்கை இரண்டிலிருந்து ஏழாக உயர்ந்துள்ளது.