இந்தியா

ஜோதிடரிடம் இருந்து ரூ.1.5 கோடி வாங்கியதாக புகார் - விசாரணைக்கு நேரில் ஆஜரானார் குட்டி ராதிகா

ஜோதிடரிடம் ஒன்றரை கோடி ரூபாய் பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி குட்டி ராதிகா விசாரணைக்கு நேரில் ஆஜராகினார்.

தந்தி டிவி

ஜோதிடரிடம் ஒன்றரை கோடி ரூபாய் பணம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமியின் மனைவி குட்டி ராதிகா விசாரணைக்கு நேரில் ஆஜராகினார். பெங்களூருவில் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த யுவராஜ் என்பவரிடம் போலீசாரிடம் சிக்கினார். அப்போது அவரிடம் நடத்திய விசாரணையில் ஆன்லைன் பணப்பரிமாற்றத்தில் குட்டி ராதிகாவிற்கு அவர் ஒன்றரை கோடி ரூபாய் பணம் அனுப்பியது தெரியவந்தது. இதுதொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும் படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதன்பேரில் குட்டி ராதிகா நேரில் விசாரணைக்கு ஆஜராகினார். அப்போது படத்தில் நடிப்பதற்காக அவர் பணம் அனுப்பியதாகவும் வேறு எந்தவித தொடர்பும் இல்லை என தெரிவித்தார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக மேலும் சில நடிகைகளுக்கும் நோட்டீசு அனுப்ப மத்திய குற்றப்பிரிவு போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்