மறைந்த கிரிஷ் கர்னாடின் உடல் முழு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படும் என கர்நாடகா மாநில முதலமைச்சர் குமாரசாமி அறிவித்துள்ளார். அவரது மறைவையொட்டி, ஒரு நாள் விடுமுறை அறிவித்துள்ள அம்மாநில அரசு, மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனிடையே, அரசு மரியாதையை ஏற்க கிரிஷ் கர்னாட் குடும்பத்தினர் மறுத்துள்ளனர்.