இந்தியா

புதுச்சேரி மக்கள் நலனில் தான் தனக்கு முன்னுரிமை - கிரண்பேடி

புதுச்சேரி மக்கள் நலனில் தான் தமக்கு முன்னுரிமை உள்ளது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் கிரண்பேடி மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கிரண்பேடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் புதுச்சேரி அமைச்சரவை முடிவுகள் எடுக்க விதிக்கப்பட்ட தடையையும் நீதிபதிகள் நீக்கினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக படித்து அறியாமல் தம்மால், கருத்து கூற முடியாது என்றார். மேலும் மக்கள் நலனில் தான் தமக்கு முன்னுரிமை என்றும் அவர் தெரிவித்தார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"