இந்தியா

புதுச்சேரி மக்கள் நலனில் தான் தனக்கு முன்னுரிமை - கிரண்பேடி

புதுச்சேரி மக்கள் நலனில் தான் தமக்கு முன்னுரிமை உள்ளது என துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
புதுச்சேரி அரசு நிர்வாகத்தில் தலையிட துணை நிலை ஆளுநருக்கு அதிகாரமில்லை என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் கிரண்பேடி மனு தாக்கல் செய்திருந்தார். வழக்கு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கிரண்பேடி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் புதுச்சேரி அமைச்சரவை முடிவுகள் எடுக்க விதிக்கப்பட்ட தடையையும் நீதிபதிகள் நீக்கினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, உச்சநீதிமன்ற உத்தரவை முழுமையாக படித்து அறியாமல் தம்மால், கருத்து கூற முடியாது என்றார். மேலும் மக்கள் நலனில் தான் தமக்கு முன்னுரிமை என்றும் அவர் தெரிவித்தார்.

Union Budget 2026 | ``5 மாநிலங்களுக்கு பட்ஜெட்டில் ஸ்பெஷல் கவனிப்பு?’’

மத்திய பட்ஜெட் நொடிக்கு நொடி அப்டேட்ஸ்

Budget 2026 Tamil | ரூ.15 லட்சமாக.. பரபரப்பை எகிறவிடும் மத்திய பட்ஜெட்

🔴LIVE : Union Budget 2026 | மத்திய பட்ஜெட் - நிர்மலா சீதாராமன் வருகை

Union Budget 2026 | பல சர்ப்ரைஸோடு தாக்கல் செய்யப்படும் 2026 பட்ஜெட்?