கோவில் திருவிழாவில் மிரண்ட யானை -நாலாபுறமும் சிதறி ஓடிய மக்கள் கேரளம் மாநிலம் மலம்பள்ளி கோவில் திருவிழாவில் ஹைட்ரஜன் பலூன் வெடித்து யானை மிரண்டு ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.. மிரண்ட யானையை பார்த்து திருவிழாவிற்கு வந்த மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை யானை சேதப்படுத்தியது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு யானை மீண்டும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.