இந்தியா

பிஞ்சுகளின் உடல்கள்... காண்போர் இதயத்தை கிழிக்கும் கொடூரம் - நிற்காமல் எரியும் தகனமேடை

தந்தி டிவி

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த குழந்தைகளின் உடல்கள் மற்றும் தலையில்லாத உடல்களை தகனம் செய்து வருவதாக, பணியாளர்கள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர்.

வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் உடல்கள், மயானங்களில் விடிய விடிய எரியூட்டப்பட்டு வருகின்றன.

இதில் ஏராளமான பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக உடல்களை தகனம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும்,

இதுவரை 37 உடல்களை தகனம் செய்துள்ளதாகவும் பணியாளர்கள் தெரிவித்தனர்.

அதில் குழந்தைகளின் உடல்கள் வந்து கொண்டிருப்பது வேதனை அளிப்பதாகக் கூறினார்.

மயானத்திற்கு வரும் உடல்கள் மிகக் கொடூரமாக இருப்பதாகவும், உறவினர்கள் அடையாளம் காண முடியாத அளவிற்கு உடல்கள் இருப்பதாகவும் தெரிவித்தனர்.

கை, கால் போன்ற உடல் பாகங்கள் மற்றும் தலையில்லாத உடல்களை தாங்கள் தகனம் செய்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு