கேரளாவில் கன மழை பெய்ததையடுத்து, 2 நாட்களுக்கு பிறகு கோத்தமங்கலம் பகுதியில், உள்ள மணிகண்டன்காலனி, வெள்ளாரங்குட்டி ஆதிவாசிகள் காலனியில் உள்ள 30 வீடுகளில் இருந்து வெள்ள நீர் வடிந்தது.
தந்தி டிவி
இதனையடுத்து, வீடுகளில் தேங்கிய சகதியை, அகற்றும் பணியில் ஈடுபட்டனர். வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான இப்பகுதியில் 300 குடும்பங்களுக்கு 3 டன் அரிசி மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.