இந்தியா

தத்துக்கொடுத்த தாய்.. 44 வருடம் கழித்து தேடி வந்த பெண்.. 3வது முறை.. கண்கலங்க வைக்கும் பாசம்

தந்தி டிவி

நான்கு வயதில் பிரான்ஸ் தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்ட பெண், தமது 48 வயது வயதில் பெற்றோரை தேடி ​மூன்றாவது முறையாக கேரளாவுக்கு வந்தார்.

கேரளாவில், குழந்தை பருவத்தில் பெற்றோரால் கைவிடப்பட்ட ரெஜினா, பத்தனம்திட்டா மாவட்டம், பாலக்காத்தக்கிடி பகுதியில் உள்ள செயிண்ட் ஜோசப் கான்வெண்டில் வளர்ந்துள்ளார். 1980-ம் ஆண்டு, தமது நான்காம் வயதில், பிரான்ஸ் நாட்டு தம்பதிக்கு தத்துக் கொடுக்கப்பட்டுள்ளார். பிரான்ஸ் நாட்டிலேயே வளர்ந்த ரெஜினா, அதே நாட்டைச் சேர்ந்த அர்னால்ட் டேனி என்பருடன் திருமணமாகி, 3 பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், தமது உண்மையான பெற்றோரை தேடி கடந்த 2017-ம் தேதி கேரளா வந்த ரெஜினா, அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் பிரான்ஸ் திரும்பினார். பின்னர், இரண்டாம் முயற்சியும் தோல்வியில் முடிய, மூன்றாம் முறையாக தற்போது ரெஜினா கேரளா வந்தார். தமது குழந்தை பருவ புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை வைத்து, தமது பெற்றோரை தேடியும் கிடைக்காததால், மூன்றாம் முறையாக அவர் ஏமாற்றத்துடன் பிரான்ஸ் திரும்பிச் சென்றார். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை