கேரளாவில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அச்சுறுத்தலை சந்திக்கும் பெண்களுக்கு 24 மணி நேர உதவிக்கு புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கேரள மாநில அமைச்சர் வீணா ஜார்ஜ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். 181 என்ற எண்ணை தொடர்பு கொண்டால் கவுன்சிலிங், சட்ட ஆலோசனை, அவசர பாதுகாப்பு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.