இந்தியா

கேரளாவில் திருநம்பி - திருநங்கை திருமணம் - உறவினர்கள், நண்பர்கள் வாழ்த்து

கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த ஹைதி சாதியா என்ற சிறுவன் பத்து வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து திருநங்கையானார்.

தந்தி டிவி
கேரள மாநிலம் திருச்சூரில் பிறந்த ஹைதி சாதியா என்ற சிறுவன் பத்து வயதில் உடலில் ஏற்பட்ட மாற்றத்தை தொடர்ந்து திருநங்கையானார். இதனால் குடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டு 18 வது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, பெங்களூர், கோவை, டெல்லி, மும்பை என பல்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொண்டார். கடந்த ஆண்டு கேரளா திரும்பிய சாதியா, திருநம்பியான திருவனந்தபுரத்தை சேர்ந்த அதர்வ் மோகன் என்பவரை சந்தித்தார். இருவருக்குமிடையே காதல் மலர்ந்த நிலையில், தற்போது திருமணத்தில் இணைந்தனர். இந்த திருமணத்திற்கு வந்து, உறவினர்களும், நண்பர்களும் வாழ்த்தினர். கடந்த 2018 ஆம் ஆண்டு இதே போல் இஷான் - சூரியா எனும் திருநங்கை - திருநம்பி ஜோடி முதன்முதலாக திருமணம் செய்து கொண்ட நிலையில், தற்போது ஹைதி சாதியா - அதர்வ் மோகன் ஜோடியின் இரண்டாவது நிகழ்வாக அமைந்துள்ளது.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு