இந்தியா

கோவில் அர்ச்சகராக பழங்குடியினத்தவர் நியமனம் : அசத்தும் தேவஸம்போர்டு - சமூகநீதி ஆர்வலர்கள் பாராட்டு

கேரளாவில் முதல் முறையாக பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர், கோயில் அர்ச்சகராக நியமிக்கப்பட்டுள்ளது பாராட்டை பெற்றுள்ளது.

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவிதாங்கூர் தேவஸம்போர்டு ஆயிரத்து 200க்கும் மேற்பட்ட கோயில்களை நிர்வகித்து வருகிறது. அவற்றில், பட்டியலினத்தை சேர்ந்த 19 பேரை அர்ச்சகராக நியமிக்க திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்தது. இதன்படி, பட்டியலினத்தைச் சேர்ந்த18 பேரும், பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவரும் கோயில் அர்ச்சகர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர். பழங்குடி இனத்தில் இருந்து ஒருவர் கோயில் அர்ச்சகராக நியமிக்கப்படுவது இதுவே முதல்முறை. இதுகுறித்து தெரிவித்த தேவசஸ்ம்போர்டு அமைச்சர், கேரள வரலாற்றில் முதல் முறையாக, இவர் நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறினார். பட்டியல் மற்றும் பழங்குடியினத்தை சேர்ந்தவர்கள் பகுதி நேர அர்ச்சகர்களாக சிறப்புப் பிரிவின் கீழ் நியமிக்கப்பட்டு வருகிறார்கள் என்றார். ஆனால், அந்த சமூகத்தினர் குறைவாக தேர்ச்சி பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை