இந்தியா

கேரளாவில் 6 பேர் கொல்லப்பட்ட வழக்கு: ஜோளி உள்ளிட்ட 3 பேரின் காவல் நீட்டிப்பு

கேரளாவில் 6 பேரைக் கொலை செய்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஜோளி உட்பட 3 பேரின் காவலை வரும் வெள்ளிக்கிழமை வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

தந்தி டிவி

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கூடத்தாயி பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் ஜோளி, அவருக்கு உதவிய பிரஜூகுமார், மேத்யூ ஆகியோர் தாமரசேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, கொலை செய்வதற்காக ஜோளியிடம் பிரஜூகுமார் கொடுத்த சயனைடு கோவையிலிருந்து வாங்கப்பட்டதாக போலீசார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனை உறுதிப்படுத்துவதற்காக அவர்களை கோவைக்கு அழைத்துச் சென்று விசாரிக்க வேண்டியுள்ளதால் காவலை நீட்டிக்கக் கோரிக்கை விடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், அவர்களது காவலை வரும் வெள்ளிக்கிழமை வரை நீட்டித்து உத்தரவிட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்