இந்தியா

உலகளாவிய டெண்டர் கோரியது கேரளா... 3 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் வாங்க முடிவு

கேரள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில், 3 கோடி டோஸ் தடுப்பு மருந்து வாங்க உலகளாவிய டெண்டர் வெளியிட்டுள்ளது

தந்தி டிவி

உலகளாவிய டெண்டர் கோரியது கேரளா... 3 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் வாங்க முடிவு

கேரள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில், 3 கோடி டோஸ் தடுப்பு மருந்து வாங்க உலகளாவிய டெண்டர் வெளியிட்டுள்ளது அமம்மாநில அரசு.கேரளாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்த பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது, 3 கோடி டோஸ் கொரோனா தொற்று தடுப்பு மருந்து வாங்குவதற்கு உலகளாவிய டெண்டரை வெளியிட்டுள்ளது. ஜூன் 5ஆம் தேதி டெண்டர் திறக்கும்போது எந்தெந்த நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்று இருக்கின்றன என்பது தெரியவரும். கேரள மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இந்த டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. கேரளாவின் தேவைக்கேற்ப கொரோனா தடுப்பு மருந்தை ஒன்றிய அரசால் வழங்க இயலாத நிலையில் இந்த முடிவை கேரள அரசு எடுத்து உள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஒடிசா தமிழ்நாடு போன்ற பல மாநில அரசுகள் உலகளாவிய டெண்டர் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு