இந்தியா

உலகளாவிய டெண்டர் கோரியது கேரளா... 3 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் வாங்க முடிவு

கேரள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில், 3 கோடி டோஸ் தடுப்பு மருந்து வாங்க உலகளாவிய டெண்டர் வெளியிட்டுள்ளது

தந்தி டிவி

உலகளாவிய டெண்டர் கோரியது கேரளா... 3 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ் வாங்க முடிவு

கேரள மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் வகையில், 3 கோடி டோஸ் தடுப்பு மருந்து வாங்க உலகளாவிய டெண்டர் வெளியிட்டுள்ளது அமம்மாநில அரசு.கேரளாவில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து செலுத்த பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு தீவிரம் காட்டி வருகிறது. தற்போது, 3 கோடி டோஸ் கொரோனா தொற்று தடுப்பு மருந்து வாங்குவதற்கு உலகளாவிய டெண்டரை வெளியிட்டுள்ளது. ஜூன் 5ஆம் தேதி டெண்டர் திறக்கும்போது எந்தெந்த நிறுவனங்கள் டெண்டரில் பங்கேற்று இருக்கின்றன என்பது தெரியவரும். கேரள மெடிக்கல் சர்வீசஸ் கார்ப்பரேஷன் என்ற நிறுவனம் இந்த டெண்டர் வெளியிடப்பட்டு உள்ளது. கேரளாவின் தேவைக்கேற்ப கொரோனா தடுப்பு மருந்தை ஒன்றிய அரசால் வழங்க இயலாத நிலையில் இந்த முடிவை கேரள அரசு எடுத்து உள்ளது. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஒடிசா தமிழ்நாடு போன்ற பல மாநில அரசுகள் உலகளாவிய டெண்டர் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்