கேரள மாநிலம் கோழிக்கோடு மக்களவை தொகுதி பாஜக வேட்பாளரும், அக்கட்சியின் இளைஞரணி மாநில தலைவருமான பிரகாஷ் பாபு சபரிமலை விவகாரம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை 14 நாட்கள் சிறையிலடைக்க பத்தணந்திட்டை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.சபரிமலையில் ஒரு பெண்ணை தாக்கிய வழக்கில் தனக்கு ஜாமீன் கேட்டு பிரகாஷ் பாபு தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் மீது மேலும் 8 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.