இந்தியா

கேரள கன்னியாஸ்திரி பலாத்கார புகார்: சமூக ஆர்வலர் 9வது நாளாக உண்ணாவிரதம்

கேரள கன்னியாஸ்திரி பலாத்கார புகாரில் பேராயரை கைது செய்யக் கோரி ஸ்டீபன் மேத்யூஸ் என்ற சமூக ஆர்வலர் ஒன்பதாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.

தந்தி டிவி

கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர், ஜலந்தரில் பணியாற்றும் பேராயர் பிரான்கோ முலக்கல் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இந்நிலையில், பேராயரை கைது செய்யக் கோரி, கொச்சியில் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஸ்டீபன் மேத்யூஸ் என்ற சமூக ஆர்வலர், ஒன்பதாவது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இன்று அவரது உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, மருத்துவமனையில் மேத்யூஸ் அனுமதிக்கப்பட்டார்.

இதுபோல கிறிஸ்தவ மறுமலர்ச்சி இயக்கத்தை சேர்ந்த இந்துலேகா ஜோசப் என்பவர், பேராயர் பிரான்கோ மீது கேரள உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் உள்ளதால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

TN Election Date | இறுதியாகும் தமிழக தேர்தல் தேதி.. வந்தது மெகா அப்டேட்

Breaking | Group 2 Exam | கடைசி நிமிடத்தில் ரத்தான குரூப் 2 தேர்வு | சற்று நேரத்தில் தொடக்கம்

DMK Congress Alliance | உச்சகட்ட பரபரப்பில் TN அரசியல் களம் - காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு?

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்