கை, கால்கள் கட்டப்பட்டு முதியவர் கொடூர கொ*ல - 13 வயது சிறுமி உட்பட 4 பேர் செய்த பயங்கரம் கேரள மாநிலம் ஆலப்புழா அருகே 65 வயது முதியவர் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 13 வயது சிறுமி உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமியின் செல்போன் ஆய்வில் கிடைத்த தகவலின் அடிப்படையில், மூன்று சிறுவர்கள் முதியவரை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மேலும் முதியவர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக சிறுமி கூறிய நிலையில், ஆடம்பர வாழ்க்கைக்காக கொள்ளையடிக்க திட்டமிட்டார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர்.