இந்தியா

கேரளா : நிலச்சரிவில் மண்ணுக்குள் புதைந்த குடும்பம் - ஒன்றரை வயது மகனை பிடித்தபடியே இறந்து கிடந்த தாய்

நிலச்சரிவில் சிக்கிய தாய், தனது ஒன்றரை வயது மகனின் கைகளை பிடித்தபடியே உயிரிழந்த சம்பவம் கேரளாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி

கேரளாவில், மலப்புரம் மாவட்டம், கோட்டக்குந்நு பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை ஏற்பட்ட நிலச்சரிவில், சரத் என்பவரின் குடும்பத்தை சேர்ந்த மூவர் மண்ணுக்குள் சிக்கினர். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், மண்சரிவுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வந்தது. கடந்த 2 நாட்களாக மண்ணை அகற்றிய நிலையில், சரத்தின் மனைவி மற்றும் ஒன்றரை வயது மகனின் சடலம் மீட்கப்பட்டது. மேலும் ஒருவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மண்ணை தோண்டி உடல்களை வெளியே எடுத்தபோது சரத்தின் மனைவி தனது மகனின் கையை இறுக பிடித்தவாறு சடலமாக கிடந்த காட்சி அனைவரது மனதையும் உருக செய்யும் விதமாக இருந்தது. இச்சம்பவத்தில் சரத் அதிருஷ்டவசமாக உயிர் தப்பியிருந்தார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு