இந்தியா

"விவசாயின் மகனாக பிறந்ததற்கு பெருமைப்படுகிறேன்" - கேரள ஆளுநர் சதாசிவம்

விவசாயின் மகனாக பிறந்ததற்கு பெருமைப்படுவதாகவும், நீதிபதி பணி ஓய்வுக்கு பின்னர் விவசாயம் செய்வதற்காக சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் கேரளா மீது கொண்ட அன்பால் ஆளுநர் பதவியை ஏற்று கொண்டதாகவும் அம்மாநில ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
விவசாயின் மகனாக பிறந்ததற்கு பெருமைப்படுவதாகவும், நீதிபதி பணி ஓய்வுக்கு பின்னர் விவசாயம் செய்வதற்காக சொந்த ஊருக்கு திரும்பிய நிலையில் கேரளா மீது கொண்ட அன்பால் ஆளுநர் பதவியை ஏற்று கொண்டதாகவும் அம்மாநில ஆளுநர் சதாசிவம் தெரிவித்துள்ளார். கேரள மாநிலம் காசர்கோட்டில் செயல்பட்டு வரும் மத்திய விவசாய ஆராய்ச்சி மையத்தில் நடைபெற்ற விவசாய கண்டுபிடிப்பாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார். விவசாய துறையில் உலகளாவிய போட்டியை எதிர்கொள்ள நமது விவசாயிகளை வலிமை உடையவர்களாக உயர்த்த வேண்டும் என்றும், புதிய நவீன யுக்திகளை விவசாயத் துறையில் உருவாக்கி, உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்துவதோடு உரிய விலை கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ள தேவை உள்ளதாகவும் கேரள ஆளுநர் சதாசிவம் சுட்டிக்காட்டினார்.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு