இந்தியா

இடுக்கியில் திரும்புகிறது இயல்பு வாழ்க்கை : கடைகள் திறப்பு

தென் மேற்கு பருவமழையின் தீவிரம் கொஞ்சம் குறைந்து விட்டதால், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடுக்கி பகுதியில் தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது

தந்தி டிவி
தென் மேற்கு பருவமழையின் தீவிரம் கொஞ்சம் குறைந்து விட்டதால், வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட இடுக்கி பகுதியில், தற்போது இயல்பு நிலை படிப்படியாக திரும்பி வருகிறது. கடைகள் திறக்கப்பட்டு சாலைகளில் வாகன போக்குவரத்து துவங்கி உள்ளது. துண்டிக்கப்பட்ட தொலைபேசி இணைப்புகளை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். மற்றொருபக்கம் தண்ணீர் சூழ, வீடுகளின் மாடிகளில் உணவு - குடிதண்ணீர் கிடைக்காமல் தவித்து வந்த குழந்தைகள், பெண்கள், மற்றும் முதியவர்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். இதனிடையே, கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக