வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு உதவி செய்யும் வகையில், குடியரசு துணைத் தலைவர் அலுவலகம் மற்றும் மாநிலங்களவை செயலகத்தை சேர்ந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஒரு மாத சம்பளத்தை வழங்க முடிவு செய்துள்ளனர். இது தொடர்பாக குடியரசு துணைத் தலைவர் வெங்கைய்ய நாயுடு தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் மற்றும் குடியரசு துணை தலைவர் செயலக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில், கேரள வெள்ள நிவாரணத்துக்கு ஒரு மாத ஊதியத்தை வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.