கேரள மாநிலம் வெட்டிகவல என்ற பகுதியில் நடைபெற்ற கோயில் விழாவுக்காக, நெடுமங்காவு பகுதியில் இருந்து மணிகண்டன் என்ற யானை வரவழைக்கப்பட்டது. அப்போது ஆயூர் - கொட்டாரக்கரை சாலையில், திடீரென பூனை குறுக்கே ஓடியதால், அச்சமடைந்த யானை மிரண்டது. இதனால் அங்கிருந்த மக்கள் அச்சமடைந்த நிலையில், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் யானை சாலை ஓரமாக ஒதுங்கியதை அடுத்து, போக்குவரத்து சரி செய்யப்பட்டு, அப்பகுதி சகஜ நிலைக்கு திரும்பியது.