கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில், போதைப் பொருள்களை புல்லட்டில் கடத்தி விற்பனை செய்து வந்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். பையனூர் சார்ந்த நிகிலா என்பவர் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புல்லட்டில் பயணம் செய்து போதை பொருள் விற்பனை செய்து வந்தார். கர்நாடக போலீசுடன் இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில் பெங்களூரில் அவர் பிடிபட்டார். நிகிலா மீது PIT NDPS சட்டத்தின் கீழ் தற்போது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.