கேரள மாநிலம் எர்ணாகுளத்தில், டீசல் நிரப்ப வந்த சுற்றுலா பேருந்து மோதி இயந்திரம் உடைந்ததை தட்டி கேட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை, ஓட்டுநர் மற்றும் பயணிகள் சேர்ந்து தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. ஓட்டுநரின் அலட்சியத்தால் பேருந்து மோதி டீசல் போடும் இயந்திரம் சேதமடைந்த நிலையில், அது குறித்துக் கேள்வி எழுப்பிய ஊழியரை ஒரு கும்பல் சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கியது. தகவலறிந்து வந்த புத்தன்கோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.