இந்தியா

கேரளாவில் அதிக விலைக்கு விற்கப்படும் தமிழக இறைச்சி கோழிகள் - கேரளாவில் இறைச்சி கோழி உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

கேரள சிக்கன் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளதால் கேரளாவில் தமிழக கறிக்கோழி விற்பனை பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

கேரள சிக்கன் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளதால், கேரளாவில் தமிழக கறிக்கோழி விற்பனை பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் இந்த திட்டத்தை கேரள அரசு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருவனந்தபுரத்தில் கோழிப்பண்ணை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மொய்தீன், தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்படும் இறைச்சி கோழிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் இதற்கு மாற்றாக கேரளாவிலேயே பெருமளவு உற்பத்தியை உருவாக்க இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார். கேரளாவில் இறைச்சி கோழி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டிருப்பது, தமிழக உற்பத்தியாளர்களுக்கு சவாலாக மாறியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை