இந்தியா

கேரளாவில் அதிக விலைக்கு விற்கப்படும் தமிழக இறைச்சி கோழிகள் - கேரளாவில் இறைச்சி கோழி உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

கேரள சிக்கன் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளதால் கேரளாவில் தமிழக கறிக்கோழி விற்பனை பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

கேரள சிக்கன் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளதால், கேரளாவில் தமிழக கறிக்கோழி விற்பனை பின்னடைவை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் இந்த திட்டத்தை கேரள அரசு தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக திருவனந்தபுரத்தில் கோழிப்பண்ணை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவில் பேசிய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மொய்தீன், தமிழகத்தில் இருந்து கொண்டு வரப்படும் இறைச்சி கோழிகள் அதிக விலைக்கு விற்கப்படுவதாகவும் இதற்கு மாற்றாக கேரளாவிலேயே பெருமளவு உற்பத்தியை உருவாக்க இந்த திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் கூறினார். கேரளாவில் இறைச்சி கோழி உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டிருப்பது, தமிழக உற்பத்தியாளர்களுக்கு சவாலாக மாறியுள்ளது.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்