இந்தியா

செஞ்சது கொலை என தெரியாமலே செய்த தாய், மகன், மகள்- குடும்பத்தோடு விலங்கு மாட்டி இழுத்து சென்ற போலீஸ்

தந்தி டிவி

இடுக்கி மாவட்டத்தில் உள்ள பள்ளிக்குன் உட்லண்ட்ஸ் எஸ்டேட் பகுதியில் வசிக்கும் கொல்லமத் பாபு- பிரேமா தம்பதிக்கு வினோத், பிபின் பாபு ஆகிய 2 மகன்களும், பினிதா என்ற மகளும் உள்ளனர். கடந்த 5 தேதி மாலை பிபின் பாபு தற்கொலை செய்து கொண்டதாக பீருமேடு தாலுகா மருத்துவமனைக்கு குடும்பத்தினர் கொண்டு சென்றனர். ஆனால், பிபின் பாபுவின் உடலில் காயங்கள் இருந்ததால், கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததை போலீசார் உறுதிப்படுத்தினர். இதுதொடர்பாக, பிபின் பாபு குடும்பத்தினரிடம் போலீசார் பல மணிநேரம் விசாரணை நடத்திய பிறகு, அவரை கொலை செய்ததை குடும்பத்தினர் ஒப்புக்கொண்டனர்.

சம்பவத்தன்று, சகோதரியின் குழந்தைக்கு பிறந்த நாள் விழா நடந்து கொண்டிருந்தபோது, மது போதையில் வந்து பிபின் பாபு தகராறு செய்துள்ளார். அப்போது, பிபின் பாபு தனது தாயாரை தாக்க முயன்றபோது, சகோதரி பினிதாவும், சகோதரர் வினோத்தும் தாக்கியதில் பிபின் பாபு நினைவிழந்தார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, தாயார், மகள், மகன் ஆகிய மூவரையும் கைது செய்த போலீசார், இந்த கொலையில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?