இந்தியா

பெண்ணிடம் தகாத வார்த்தையில் பேசிய கேரள நடிகர் மீது வழக்குப் பதிவு

தமிழ், மலையாளம் உட்பட பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் கேரளாவை சேர்ந்த நடிகர் வினாயகன், தலித் பெண் சமூக செயற்பாட்டாளரிடம் செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறி 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

தந்தி டிவி

தமிழ், மலையாளம் உட்பட பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்து வரும் கேரளாவை சேர்ந்த நடிகர் வினாயகன், தலித் பெண் சமூக செயற்பாட்டாளரிடம் செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசியதாக கூறி 4 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். துருவ நட்சத்திரம், திமிரு, சிலம்பாட்டம் போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் வினாயகன். இவர், மிருதுளா சசீதரன் என்ற இளம்பெண்ணிடம் செல்போனில் தகாத வார்த்தைகளால் பேசியதாக முகநூலில் அந்த பெண் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவரை கைது செய்யக்கோரி கேரளாவில் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்நிலையில், கல்பற்றா பகுதி போலீசார் , வினாயகன் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Breaking | T20 | SA Vs Afg | T20 உலகக்கோப்பை - 2வது சூப்பர் ஓவரில் ஆப்கனை வீழ்த்தியது SA

Afghanistan | SouthAfrica | திக்..திக்.. ஒரே போட்டியில் 2 சூப்பர் ஓவர்கள்

BJP | ``நயினார் நாகேந்திரன் தலைமையில் '' - பாஜக முக்கிய அறிவிப்பு

TVK Vijay Breaking | தவெகவில் கூடுகிறது - அறிவித்து அதிரவிட்ட விஜய்

DMK Congress Alliance|``அங்கல்லாம் ஒத்து வருது..இங்க ஏன் வராது?’’-பிரவீன் சக்ரவர்த்தி CM-க்கு கேள்வி