இந்தியா

கத்துவா சிறுமி கொல்லப்பட்ட வழக்கு : குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில் 6 பேர் குற்றவாளிகள்

நாட்டையே உலுக்கிய கத்துவா சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில், 6 பேர் குற்றவாளிகள் என பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தந்தி டிவி
காஷ்மீரில் உள்ள கத்துவா கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவம் நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பான வழக்கில் கிராமத்தின் தலைவர் சஞ்சி ராம், அவரின் மகன் விஷால், சஞ்சி ராமின் நண்பர்கள் மற்றும் ஆதாரங்களை அழிக்க முயன்ற 3 காவலர்கள் என 8 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ஒருவன் சிறுவன் என்பதால் அவன் மீது வழக்கு தொடரப்படவில்லை. இதையடுத்து 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, பதான்கோட் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. ஒரு வருடமாக நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணை கடந்த 3ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேரில், 6 பேரை குற்றவாளிகள் என பதான்கோட் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், சஞ்சி ராமின் மகன் விஷால், சம்பவம் நடந்த நேரத்தில் தான் பள்ளியில் தேர்வெழுதி கொண்டிருந்ததாக கூறி அளித்த மனுவை ஏற்ற நீதிமன்றம் அவனை விடுவித்துள்ளது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்