பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஜாபராபாத் நகரில் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமித்த தினத்தை கருப்பு நாளாக, அப்பகுதி மக்கள் அனுஷ்டித்தனர். இதையொட்டி, நடந்த பேரணியை, பாகிஸ்தான் ராணுவம் மற்றும் போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும், கண்ணீர் புகை குண்டுகளை வீசி, துப்பாக்கி சூடு நடத்தியதில் 2 பேர் உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.