இந்தியா

காசிபூரில் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் : காவலர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம் காசிபூரில் போலீசார் வந்த வாகனம் மீது நிஸ்கத் கட்சியினர் நடத்திய கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில், 45 வயதான காவலர் சுரேந்திர வாட்ஸ் உயிரிழந்துள்ளார்.

தந்தி டிவி
உத்தரப்பிரதேச மாநிலம் காசிபூரில் போலீசார் வந்த வாகனம் மீது நிஸ்கத் கட்சியினர் நடத்திய கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தில், 45 வயதான காவலர் சுரேந்திர வாட்ஸ் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவத்தில் 2 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பிரதமர் மோடியின் உத்தரபிரதேச வருகையை கண்டித்து நிஸ்கத் கட்சியினர் போராட்டம் நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில், அக்கட்சியின் மூத்த தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இதை அடுத்து கல்வீச்சு சம்பவம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக 32 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து 23 பேரை கைது செய்துள்ளனர். இதற்கிடையே, உயிரிழந்த காவலர் குடும்பத்துக்கு அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் 40 லட்சம் ரூபாய் நிவாரண நிதி அறிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்