கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தின் குந்தாபுரா என்ற பகுதியில், பெண்களை கேலி செய்ததாக இளைஞர் ஒருவரை கம்பத்தில் கட்டிவைத்து அடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தந்தி டிவி
கல்லூரி மாணவிகள் சிலரிடம் ஜாவித் சில்மிஷம் செய்ய முயன்ற போது, ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அவரை கம்பத்தில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கினர். இதையடுத்து அந்த இளைஞரை கைது செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.