Karnataka | கர்ப்பமான நீர்யானையை செக் செய்தபோது கொடூரம் - ரத்தம் வெளியேறி டாக்டர் மரணம் #karnataka #doctor #thanthitv கர்நாடக மாநிலம் ஷிமோகா அருகே உள்ள தியாவரேகொப்பா உயிரியல் பூங்காவில், நீர்யானை தாக்கியதில் இளம் பெண் கால்நடை மருத்துவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவர் சமீட்சா ரெட்டி, இந்தப் பூங்காவில் பயிற்சி அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். அங்கிருந்த ஒரு சினையுற்ற நீர்யானையின் உடல் வெப்பநிலையை அவர் ஆய்வு செய்துகொண்டிருந்தார். அப்போது, அந்த நீர்யானை எதிர்பாராத விதமாக ஆக்ரோஷமாக மாறி மருத்துவர் சமீட்சாவைத் தாக்கியது. இதில் கல்லீரல் பகுதியில் பலத்த காயமடைந்த அவர், ரத்தப்போக்கு காரணமாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இன்னும் 45 நாட்களில் இவரது மருத்துவர் பயிற்சி காலம் முடிவடைய இருந்த நிலையில், இந்தப் சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு கர்நாடக வனத்துறை அமைச்சர் இரங்கல் தெரிவித்துள்ளதோடு, உயர்மட்ட விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளார்.