இந்தியாவுக்கு சுற்றுலா வந்த வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம் - பேரதிர்ச்சி கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்ணுக்கு, பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குடகு மாவட்டம் குட்டா பகுதியில் அமைந்துள்ள ரிசார்ட்டில் தங்கியிருந்த, வெளிநாட்டு பெண்ணுக்கு இருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் பேரில் 2 பேரை கைது செய்து நீதிமன்ற காவலில் அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர்.