இந்தியா

கோயிலில் பிரசாதம் சாப்பிட்ட 11 பேர் உயிரிழப்பு : இருதரப்பு மோதலால் விஷம் கலந்திருக்க வாய்ப்பு

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கோயில் திருவிழாவில் பிரசாதம் சாப்பிட்டதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது

தந்தி டிவி
சாம்ராஜ் மாவட்டம், கெனூரில் உள்ள அம்மன் கோயில் திருவிழா தொடர்பாக இருபிரிவினரிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது .. இந்நிலையில், கோவில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அதில், பிரசாதமாக வழங்கப்பட்ட தக்காளி சாதத்தை சாப்பிட்ட, 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் மேலும் 4 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 70-க்கும் அதிகமானோர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரத்தில், மகேஷ், சிஞ்சி ஆகிய இருவரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி