பிரபல இசையமைப்பாளர் இளையராஜா கர்நாடகா மாநிலம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு 4 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர கிரீடம் மற்றும் வாளை காணிக்கையாக வழங்கினார். ஒவ்வொரு ஆண்டும் இங்கு தனது பிறந்தநாளைக் கொண்டாடும் அவர் தனது இசை சேவைகளையும் வழங்கி வருகிறார்.அந்த இந்நிலையில் வைர கிரீடம் மற்றும் ஆபரணங்களுடன், வீரபத்திரருக்கு வெள்ளி கிரீடம் மற்றும் வாளை இளையராஜா காணிக்கையாக வழங்கியுள்ளார்.. முன்னதாக நடைபெற்ற ஊர்வலத்தில் கோயில் நிர்வாகக் குழுவினர், அர்ச்சகர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்