மதிய உணவு சாப்பிட்ட 62 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம், அவுராத் தாலுகாவில் உள்ள ஜமலாப்பூர் அரசு ஆரம்பப் பள்ளியில் வழங்கப்பட்ட மதிய உணவால், 62 மாணவர்களுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அவர்கள் அவுராத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 61 மாணவர்கள் தற்போது நலமடைந்துள்ளனர். ஒரு மாணவி மேல்சிகிச்சைக்காக மாவட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு பள்ளி சமையலறை அசுத்தம் காரணமா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.