இந்தியா

முகாமில் பயிற்சி பெற்ற காட்டு யானை, தனியார் பேருந்து மோதி பலி...

கர்நாடக மாநிலம் குடகு யானைகள் பயிற்சி முகாமில், பேருந்து மோதியதில், 46 வயது ஆண் யானை உயிரிழந்தது.

தந்தி டிவி

* கடந்த 2014ஆம் ஆண்டு, பெங்களூரு பன்னார்கட்டா வனப்பகுதியில் சுற்றித்திரிந்த ஒற்றை யானை தாக்கியதில் 20 பேர் காயமடைந்தனர். அந்த யானையை பிடித்து, குடகு மாவட்டத்தில் உள்ள யானைகள் புத்துணர்ச்சி முகாமில் வனத்துறையினர் சேர்த்தனர். ரவுடித்தனம் செய்ததால் யானைக்கு 'ரவுடி ரங்கா' என பெயரும் சூட்டியிருந்தனர். ஆறு மாதங்களில் பாகன்களுக்கு கட்டுப்பட ஆரம்பித்த அந்த யானை, நல்ல நிலைக்கு மாறியது.

* இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலையில், பயிற்சி முகாமுக்கு அருகில் உள்ள சாலைக்கு யானை ரங்கா வந்துள்ளது. அப்போது, கேரளாவில் இருந்து பெங்களூரு நோக்கி சென்ற தனியார் பேருந்து ஒன்று மோதியதில், ரங்காவின் முதுகெலும்பு முறிந்தது. ரத்தம் வழிய சுருண்டு கிடந்த ரங்காவுக்கு கால்நடை மருத்துவர் முஜிப் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். 5 மணி நேரமாக நீடித்த சிகிச்சை பலனின்றி யானை ரங்கா உயிரிழந்ததால், புத்துணர்ச்சி முகாமில் சோகம் ஏற்பட்டுள்ளது.

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்