இந்தியா

கணக்கில் வராத ஐந்தரை கோடி `பிளாக் மணி'.. கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி.. களமிறங்கிய ED, IT அதிகாரிகள்

தந்தி டிவி

கர்நாடகாவில், நகை வியாபாரி ஒருவரின் வீட்டிலிருந்து ஐந்தரை கோடி ரூபாய் பணம் மற்றும் 2 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

கர்நாடகாவின் பெல்லாரி மாவட்டம் கம்பளி பஜாரை சேர்ந்த நகை வியாபாரி நரேஷ் சோனி என்பவரது வீட்டில் போலீசார் திடீர் சோதனை நடத்தினர். சோதனையில், கணக்கில் வராத.. ஐந்தரை கோடி ரூபாய் பணம் மற்றும் 3 கிலோ தங்கம், 103 கிலோ வெள்ளி நகைகளையும் பறிமுதல் செய்த போலீசார், உடனடியாக, அமலாக்கத்துறைக்கும், வருமான வரித்துறைக்கும் தகவல் தெரிவித்தனர். தேர்தல் நேரமென்பதால் வாக்காளர்களுக்கு விநியோகம் செய்யும் நோக்கில் பணமும், நகைகளும் பதுக்கி வைக்கப்பட்டதா என இதன் பின்னணி குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்