இந்தியா

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்... மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாய உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம்... மேல்முறையீடு செய்ய கர்நாடகா முடிவு

மேகதாதுவில் அணை கட்டும் விவகாரம் தொடர்பாக பசுமைத் தீர்ப்பாய உத்தரவிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.மேகதாது பகுதியில், கர்நாடக அரசு அணை கட்டும் பணிகள் தொடங்கிவிட்டதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், இந்த விவகாரத்தை தாமாக முன் வந்து விசாரணை நடத்தினர். இதன் முடிவில் இந்த தகவலின் உண்மைத்தன்மையை ஆராய சிறப்பு குழு ஒன்றை அமைப்பதாக பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.இந்த நிலையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாக கர்நாடகா அரசு தெரிவித்துள்ளது.முதலமைச்சர் எடியூரப்பா தலைமையில் நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மேகதாது பகுதியில் அணை கட்டும் பணிகள் எதுவும் தொடங்கவில்லை என்றும்,அப்பகுதியில் உள்ள மண் சாலை ஒன்றை சீரமைக்க கொண்டுசெல்லப்பட்ட கட்டுமான பொருட்களை பார்த்த தமிழக விவசாயிகள், தவறாக புரிந்து கொண்டு குற்றச்சாட்டை எழுப்பியதால், பசுமை தீர்ப்பாயம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை