கர்நாடகாவின் மண்டியா மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த கண்டெய்னர் லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். பெங்களூருவில் இருந்து மண்டியாவை நோக்கி சென்று கொண்டிருந்த கர்நாடகா அரசு பேருந்து எக்ஸ்பிரஸ், நெடுஞ்சாலையில் இருந்து சர்வீஸ் சாலைக்கு திரும்பிய போது கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற கண்டைனர் லாரி மீது மோதி கவிழ்ந்தது. இதில் பேருந்தில் பயணித்த பள்ளி மாணவர்கள் உட்பட 20 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது.