இந்தியா

நடத்துனரை கத்தியால் குத்திய இளைஞர்? - அதிர வைத்த பகீர் வாக்குமூலம்

தந்தி டிவி

கர்நாடக தலைநகர் பெங்களூருவில் பேருந்தின் கதவருகே நிற்க வேண்டாம் என கூறியதற்கான நடத்துநரை இளைஞர் கத்தியால் குத்தியதாக கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரியானாவைச் சேர்ந்த ஹரிஷ் சின்ஹா நடத்துனர் யோகேஷை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்றுள்ளார். சமயோசிதமாக செயல்பட்ட ஓட்டுனர் அந்த இளைஞரை உள்ளேயே வைத்து பேருந்தின் கதவுகளை மூடிவிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். கடுப்பான ஹரிஸ் பேருந்து கண்ணாடிகளை உடைத்து விட்டு வெளியேற முயன்ற நிலையில் முடியவில்லை. போலீசார் விரைந்து வந்து ஹரிஷைக் கைது செய்தனர்... வேலையை இழந்த விரக்தியில் இருந்த ஹரிஷ், உணவுக்காக அலையாமல் சிறைக்கு சென்று விடலாம் என்ற எண்ணத்தில் இந்த செயலில் ஈடுபட்டதாக கூறியுள்ளார். இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ