கேரளாவில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் நடிகை கல்யாணி பிரியதர்ஷன் செய்த செயல் பாராட்டுகளை குவித்து வருகிறது. கேரள மாநில இளைஞர் ஆணையம் நடத்திய விழாவில், இரண்டு கைகளும் இல்லாத மாற்றுத்திறனாளி சிறுமிக்கு விருது வழங்கப்பட்டது. அப்போது மேடையில் இருந்த கல்யாணி பிரியதர்ஷன், உடனே முன்வந்து அந்த சிறுமியின் சார்பாக விருதை பெற்றுக்கொடுத்தார்.