இந்தியா

சுதந்திரத்தன்மையுடன் இயங்குவதே நீதித்துறைக்கு அடிப்படையானது - நீதிபதி இந்திரா பானர்ஜி

சுதந்திரத்தன்மையுடன் இயங்குவதே நீதித்துறைக்கு அடிப்படையானது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஏழு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகளை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்றாலும், வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதன் மூலம் தீர்ப்பில் தரத்தை குறைத்து விடக் கூடாது என்றார். பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் நிகழ்வுகள், இருபிரிவினரிடையே மோதல் போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, சட்டப்பார்வையுடன் நீதிமன்றங்கள் அதனை அணு வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்