இந்தியா

சுதந்திரத்தன்மையுடன் இயங்குவதே நீதித்துறைக்கு அடிப்படையானது - நீதிபதி இந்திரா பானர்ஜி

சுதந்திரத்தன்மையுடன் இயங்குவதே நீதித்துறைக்கு அடிப்படையானது என சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் ஏழு கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஓருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகளுக்கான குடியிருப்புகளை, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என்றாலும், வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதன் மூலம் தீர்ப்பில் தரத்தை குறைத்து விடக் கூடாது என்றார். பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கும் நிகழ்வுகள், இருபிரிவினரிடையே மோதல் போன்ற சம்பவங்கள் நடக்கும்போது, சட்டப்பார்வையுடன் நீதிமன்றங்கள் அதனை அணு வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்