இந்தியா

ஜோத்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

ஒடிசாவில் சட்டவிரோதமாக செயல்பட்ட துப்பாக்கி தொழிற்சாலை

ஒடிசா மாநிலத்தின் நயாகர் மாவட்டத்தில் உள்ள மாலிசாஹி என்ற இடத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த துப்பாக்கி தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். அந்த தொழிற்சாலையை நடத்தி வந்த கபு மகாராணா என்பவரை கைது செய்த போலீசார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உமா காந்த் மாலிக் தலைமையிலான போலீசார் அங்கிருந்த ஏராளமான வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக கபு மகாராணா மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாள் விழா - சபரிமலை நடை நாளை திறப்பு

சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை நாளை திறக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளில் சபரிமலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாள் வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதற்காக நாளை மாலை 5 மணிக்கு கோவிலின் நடை திறக்கப்படுகிறது. மேலும் இந்த நாட்களில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று சபரிமலை கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்