இந்தியா

ஜோத்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்த கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

தந்தி டிவி

ஒடிசாவில் சட்டவிரோதமாக செயல்பட்ட துப்பாக்கி தொழிற்சாலை

ஒடிசா மாநிலத்தின் நயாகர் மாவட்டத்தில் உள்ள மாலிசாஹி என்ற இடத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த துப்பாக்கி தொழிற்சாலையை போலீசார் கண்டுபிடித்து உள்ளனர். அந்த தொழிற்சாலையை நடத்தி வந்த கபு மகாராணா என்பவரை கைது செய்த போலீசார், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் உமா காந்த் மாலிக் தலைமையிலான போலீசார் அங்கிருந்த ஏராளமான வெடிமருந்துகள், ஆயுதங்கள் மற்றும் இயந்திரங்களை பறிமுதல் செய்துள்ளனர். இதுதொடர்பாக கபு மகாராணா மீது வழக்குப் பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சித்திரை திருநாள் மகாராஜா பிறந்த நாள் விழா - சபரிமலை நடை நாளை திறப்பு

சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளையொட்டி சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை நாளை திறக்கப்பட உள்ளது. ஆண்டுதோறும் சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாளில் சபரிமலை நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சித்திரை திருநாள் மகாராஜாவின் பிறந்த நாள் வரும் வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது. அதற்காக நாளை மாலை 5 மணிக்கு கோவிலின் நடை திறக்கப்படுகிறது. மேலும் இந்த நாட்களில், பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று சபரிமலை கோவில் நிர்வாகம் கூறி உள்ளது.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு