இந்தியா

கன்னையா குமார் மீதான தேசத்துரோக வழக்கு : பொதுநல மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

ஜே.என்.யு மாணவர் பேரவை முன்னாள் தலைவர், கன்னையா குமார் மீதான தேசத்துரோக வழக்கை, குறிப்பிட்ட கால வரம்புக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க, டெல்லி அரசுக்கு உத்தரவிடக்கோரி, வழக்கு தொடரப்பட்டது.

தந்தி டிவி

ஜே.என்.யு மாணவர் பேரவை முன்னாள் தலைவர், கன்னையா குமார் மீதான தேசத்துரோக வழக்கை, குறிப்பிட்ட கால வரம்புக்குள் விசாரித்து நடவடிக்கை எடுக்க, டெல்லி அரசுக்கு உத்தரவிடக்கோரி, வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. நந்தகிஷோர் கர்க் என்பவர் தாக்கல் செய்த இந்த பொதுநல மனு, தலைமை நீதிபதி போப்டே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை நீதிபதி போப்டே, குறிப்பிட்ட விஷயத்தையும், அது தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் சுட்டிகாட்டாமல் பொதுவான கோரிக்கையை கொண்ட மனுவை, விசாரிக்க முடியாது என தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்தார்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி