Jharkhand Protest | ஜார்க்கண்டில் உச்சம் பெற்ற மாணவர்கள் போராட்டம்
ஜார்க்கண்ட் தேர்வு முறைகேடு சர்ச்சை ஹேமந்த் சோரன், ராகுல் உருவபொம்மைகளை எரித்து போராட்டம் ஜார்க்கண்ட் மாநில அரசுத் வேலைவாய்ப்புத் தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அம்மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன், மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோரின் உருவபொம்மைகளை எரித்து மாணவர்கள் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஞ்சியில் மாணவர்கள் கடந்த 23 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட தேர்வுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், இந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தி போராட்டக்காரர்கள் முழக்கங்களை எழுப்பினர்.