இந்தியா

ஜார்கண்ட் முதல்வர் கைதாக வாய்ப்பு..?உடனடியாக அமலான 144 தடை

தந்தி டிவி

நில மோசடி குறித்த வழக்கில் ஹேமந்த் சோரனுக்கு பல முறை சம்மன் அனுப்பிய நிலையில், கடந்த வாரம் அவரது வீட்டிலேயே விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், டெல்லியில் உள்ள ஹேமந்த் சோரன் இல்லத்தில் 36 லட்சம் ரூபாய் ரொக்கம், சொகுசு கார் உள்ளிட்டவற்றை அமலாக்கத்துறையினர் கைப்பற்றினர். இதுதொடர்பாக ஹேமந்த் சோரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் போராட்டம் காரணமாக, ராஞ்சியில் உள்ள முதல்வரின் இல்லத்தை சுற்றிலும் 144 தடை அமல்படுத்தப்பட்டது. அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் முதல்வர் இல்லத்தில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் மாளிகை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் சுமார் 2000 பாதுகாப்பு படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஹேமந்த் சோரன் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியானதால் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்